போராட்டம் நாளையும் தொடரும்: அண்ணா தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் நாளையும் தொடரும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் நாளையும் தொடரும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பஞ்சாப் அணிவகுப்பு மாநிலம் முழுவதும் வலம்வரும்: பகவந்த் மான் அறிவிப்பு!
Advertisement
Advertisement
அதையடுத்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டன.
இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கண்ணன், “போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் நாளையும் தொடரும். தமிழ்நாடு அரசு தங்களை உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் அமைச்சர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்துவது பொது மக்களுக்கு விரோதமானது, எனவே போராட்டத்தை கைவிட வேண்டும். அதிமுக ஆட்சியில் வழங்காத கோரிக்கைகளை இப்போது அதே அதிமுகவுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'குஜராத்தில் எல்லாமே போலி': பட்டியலிட்ட மல்லிகார்ஜுன கார்கே!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.