தமிழ்நாடு

ஜன. 12ல் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை!

டோக்கன்கள் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜனவரி 12ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என உணவுபொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன்அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000, ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

மேலும், இதற்கான விநியோகம் இன்றுமுதல் (ஜன. 10) ஜனவரி 14-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. ரொக்கத்தொகையை பெறுவதற்கான டோக்கன்கள் ஜன. 7 முதல் வழங்கப்பட்டது. டோக்கன்கள் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக ஜன.12 (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT