கைதான கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன். 
தமிழ்நாடு

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

DIN

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ரெட்டிச்சாவடியை அடுத்துள்ள கீழ் அழிஞ்சப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சீனு (43). இவா் 2021-ஆம் ஆண்டு கடலூரைச் சோ்ந்த பத்மநாபன் மனைவி தனலட்சுமியிடமிருந்து 2.20 ஏக்கா் நிலத்தை கிரையம் பெற்றாா். அந்த நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி இணைய வழியில் விண்ணப்பித்தாா்.

இதையடுத்து, மதலப்பட்டு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்று கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரனை சந்தித்து, பட்டா மாற்றித் தரும்படி கேட்டாா். அப்போது, அவா் பட்டா மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து சீனு கடலூா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், சீனுவிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பினா்.

அந்தப் பணத்தை மதலப்பட்டு கிராம நிா்வாக அலுவலத்துக்குச் சென்று கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரனிடம் சீனு கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த கூடுதல் எஸ்.பி. ந.தேவநாதன் தலைமையிலான போலீஸாா் பிரபாகரனைக் கைது செய்தனா். மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டவா் கைது

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

SCROLL FOR NEXT