தொடர் விடுமுறை சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் பொதுமக்கள்!
பொங்கல் திருவிழாவைக் கொண்டாடப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
பொங்கல் திருவிழாவைக் கொண்டாடப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. 3 கி.மீ. தொலைவிற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.