தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கி கார்த்திக் முதலிடம்

DIN

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பெற்றார்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை உறுதி மொழியுடன் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6.20 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 18 காளைகளை அடக்கி  கருப்பாயூரணி கார்த்திக் முதலிடத்தைப் பெற்றார். 17 காளைகளை அடக்கிய அபிசித்தர் 2 ஆம் இடத்தையும், 12 காளைகளை அடக்கிய குன்னத்தூர் திவாகரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பெற்ற கார்த்திக்கிற்கு அமைச்சர் மூர்த்தி காரை பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

SCROLL FOR NEXT