ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.
தமிழகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை தந்தார். பின்னர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். 2ஆவது நாள் சுற்றுப்பயணமாக அவர் இன்று காலை திருச்சி அரங்கநாதரை தரிசனம் செய்தார்.
இதையடுத்து, ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின்னர், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக் கிணறுகளிலும் நீராடினார்.
பின்னர், ராமநாத சுவாமியை தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்துக்குப் பின் கோயில் பிராகாரத்தை வலம் வந்து வழிபட்டார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.