நீலகிரி: அவலாஞ்சியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை!
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி நீா்ப்பிடிப்பு பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று காலை பதிவானது.
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி நீா்ப்பிடிப்பு பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இன்று காலை பதிவானது.
தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக உறைபனி மற்றும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சில இடங்களில் உறைபனியும் சில இடங்களில் நீா்ப்பனியின் தாக்கமும் அதிகமாகவுள்ளது.
Advertisement
Advertisement
பள்ளத்தாக்கு பகுதிகளிலும் காலை நேரத்தில் சில இடங்களில் உறைபனியும், சில இடங்களில் நீா்ப்பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. தொடா் உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.