முற்றோதலில் பங்கேற்ற பவானி தியாகராச அய்யா உள்ளிட்டோர் 
தமிழ்நாடு

சேவூர் வாலீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

சேவூர் கோயியில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது,

DIN

அவிநாசி: சேவூர் வாலீஸ்வரர் திருக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடக்க வேண்டி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொங்கு வட்டாரத்தில் உள்ள ஏழு சிவ தலங்களில் வைப்புத்தலமாகவும் நடு சிதம்பரம் என போற்றப்படும் பெருமைக்குரிய சேவூர் அறம்வளர்த்தநாயகி உடனமர் வாலீஸ்வரர் கோயில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ளது.

முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள்

இக்கோயில் திருப்பணி நடைபெற அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி கூறும்வகையிலும் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டியும் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அரன்பணி அறக்கட்டளை மற்றும் திருநணா சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் தலைவர் பவானி  தியாகராச ஐயா தலைமை வகித்தார். திரளான மக்கள் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT