வேங்கைவயல் வழக்கு பிப். 12க்கு ஒத்திவைப்பு 
தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கு பிப். 12க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டை: வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சிபி சிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர். 

இதற்கான மனு மாவட்ட எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட இம்மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து வரும் பிப்.12ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT