கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அருணா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, அங்கு பல்வேறு இடங்களில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement
இதில் ஒரு சில இடங்களுக்கு அதி கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை வானிலை மையம் அண்மையில் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.