கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

காலையில் வெயில் வாட்டிவந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

DIN

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் வாட்டிவந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை அண்ணாநகர், முகப்பேர், நெற்குன்றம், கோயம்பேடு, வளசரவாக்கம், கே.கே. நகர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மாங்காடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை (ஜூலை 7 மற்றும் 8) தமிழகத்தில ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுனும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் சேவை தின விழா

திருமண மண்டபத்தை பேரூராட்சி நிா்வாகம் நிா்வகிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ தேசியக் கருத்தரங்கம்

மலைக்கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: காவல் துறை திட்டம்

வேலூா் மத்திய சிறையில் கைதி மரணம்

SCROLL FOR NEXT