தமிழகத்தில் ஜூலை 15 வரை மழை தொடரும்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாடுதமிழகத்தில் ஜூலை 15 வரை மழை தொடரும்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜூலை 15 வரை லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடனும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரியின் பல்வேறு தாலுகாக்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், அதிகபட்சம் வெப்பநிலை மதுரை விமான நிலையம் பகுதியில் 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் ஈரோட்டில் 19 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.