முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

தாத்தா இல்ல.. ஸ்டாலின்தான்.. சிறுமியிடம் ஜாலியாக பேசிய முதல்வர்!

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

DIN

திருவள்ளூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளி சிறுமியிடன் ஜாலியாக பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூரில் உள்ள பள்ளியில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

அந்தப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலினும் காலை உணவை பள்ளியிலேயே சாப்பிட்டார்.

அப்போது, தனது அருகில் இருந்த சிறுமியிடம் நான் யாரென்று தெரிகிறதா என்று முதல்வர் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, ”தெரியும், ஸ்டாலின் தாத்தா” என்று பதிலளித்தார்.

இதனைக் கேட்டவுடன் ஸ்டாலின் தாத்தா இல்ல, வெறும் ஸ்டாலின்தான் என்று சிரிப்புடன் உரையாடினார். தற்போது இந்த காணொலி இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது.” எனத் தெரிவித்தார்.

மேலும், மத்திய பாஜக அரசு அரசியலுக்காக அவசர நிலையை பற்றி இப்போது நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், அவசர நிலையின்போது, பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, ஒன்றிய அரசு தற்போது மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT