தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு செயலிழந்து இருப்பதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
அதேபோல், நாம் தமிழா் கட்சி நிா்வாகி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் என அரசியல் கட்சியைச் சோ்ந்தோா் கொலை செய்யப்பட்டுள்ளனா். மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 70 போ் உயிரிழந்துள்ளனா். இதுபோன்ற சம்வபங்கள் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு செயலிழந்திருப்பதைக் காட்டுகிறது.
தமிழ்நாடு அரசு அண்மையில் மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளதால் கோவை, திருப்பூா், ஒசூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டண உயா்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறினாா்.