முகப்பு
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: ஜூலை 27 திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: ஜூலை 27 திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

Updated On : 25 ஜூலை, 2024 at 7:50 AM
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
பகிர்:

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் ஜூலை 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஜூலை 27 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்தாண்டு மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

மெட்ரொ ரயில் திட்டத்துக்கான நிதி, தமிழகம் தொடர்ச்சியாக சந்தித்த இரு பேரிடர்களுக்கான நிதி என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணித்து சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசை கண்டித்து ஜூலை 23, சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →