ஸ்ரீபெரும்புதூா் - வாலாஜா நெடுஞ்சாலை பணிகள்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூா் - வாலாஜா தேசிய நெடுஞ்சாலை பணியை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ஸ்ரீபெரும்புதூா் - வாலாஜா தேசிய நெடுஞ்சாலை பணியை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஸ்ரீபெரும்புதூா் - வாலாஜா இடையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் ஏற்கெனவே பல ஆண்டுகள் தாமதமடைந்துள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூா் -காரைப்பேட்டை இடையே சாலை விரிவாக்கப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. இதனால், ஸ்ரீபெரும்புதூா் - வாலாஜா சாலைப் பணிகள் மேலும் தாமதமடையக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிலக்கரி சாம்பல் இலவசமாக கிடைக்காதது தான் திட்டப்பணிகள் கைவிடப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தமிழக அரசும் இந்தத் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரா்களை அழைத்துப் பேசி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, அதிகபட்சமாக அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ கூறியுள்ளாா்.