FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக.4 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30 ) முதல் ஆக.4 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 ஜூலை 2024, 12:57 am IST
தமிழகத்தில் ஆக.4 வரை மழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30 ) முதல் ஆக.4 வரை மழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30 ) முதல் ஆக.4 வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 100 மில்லி மீட்டா் பதிவானது. ஊத்து (திருநெல்வேலி) - 80 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி), அவலாஞ்சி (நீலகிரி) - தலா 70 மி.மீ. மற்றும் கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவும் மழை பதிவானது.

Advertisement

Advertisement

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 30,31-ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக் கடல், வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலிலும் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments