தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். காவலர் சுட்டுத் தற்கொலை!

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த சி.ஐ.எஸ்.எப். காவலர் சந்திரசேகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

DIN

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த சி.ஐ.எஸ்.எப். காவலர் சந்திரசேகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன.இங்கு பாதுகாப்பு பணிக்காக பணியில் சி.ஏ.எஸ்.எப். காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் விமான நிலையத்திற்குள் உள்ளே செல்கின்ற பயணிகளையும், விமானத்திலிருந்து வருகின்ற பயணிகளையும் பாதுகாப்புப் பணிக்காக சோதனை செய்து வெளியில் அனுப்புவார்கள்.

இந்நிலையில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சி.ஏ.எஸ்.எப். காவலர் சந்திரசேகர் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தாடை பகுதியில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. தற்கொலை குறித்து விமானப்படை அதிகாரிகள் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கோவை பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT