தமிழ்நாடு

ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்! ரயில் பயணிகள் அவதி!

ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்டது.

DIN

ஈரோட்டிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருப்பத்தூர் கட்டேரி பகுதியில் சரக்கு ரயிலின் 17 வது பெட்டியின் சக்கரங்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டது.

பின்னர், ரயில்வே துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் ரயில்வே துறை ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து, தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக ஈரோடு வழித்திடத்தில் செல்லும் தன்பாத், ஹலபி, உள்ளிட்ட ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT