திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்கக் கோரி அதிமுக கடிதம்
முன்னாள் அமைச்சா் பொன்முடியின் திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சா் பொன்முடியின் திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கைக் கடிதத்தை சட்டப் பேரவைச் செயலா் கி.சீனிவாசனிடம், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சி.விஜயபாஸ்கா், தளவாய் சுந்தரம் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் அளித்தனா். சொத்து குவிப்பு வழக்கு தொடா்பாக நீதிமன்றம் அளித்த தண்டனை காரணமாக அமைச்சா் க.பொன்முடி தனது பதவியை இழந்தாா். நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா். அவா் அமைச்சா் பதவியை இழந்தாலும் அவா் பேரவை உறுப்பினராகத் தொடா்கிறாா்.
இந்த நிலையில், அவரது திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டுமென சட்டப் பேரவைச் செயலகத்திடம் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.