முகப்பு
தமிழ்நாடு

நாளை 7 நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்

Updated On : 2 மார்ச், 2024 at 2:02 PM
பகிர்:

நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக நாளை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாளை மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சமாளிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டிலும் நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அட்டவணை மாற்றம் நாளை மட்டுமே பொருந்தும் என்றும் அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 முதல் 10:00 மணி வரை மற்றும் மாலை 08:00 முதல் 10:00 மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →