திமுக எம்.பி. கனிமொழி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல்!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக கனிமொழி எம்.பி. விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

DIN

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட மார்ச் 1 ஆம் தேதி விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.

வரும் மார்ச் 7 ஆம் தேதி 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எம்.பி. கனிமொழி அவரது விருப்ப மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு குறித்து முதல்வருடன், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT