தமிழ்நாடு

புதுச்சேரி சிறுமி இறப்பு: கடலில் இறங்கிப் போராடிய மக்கள்!

புதுச்சேரி சிறுமி இறப்பு விவகாரத்தில் நடவடிக்கை கோரி கடலில் இறங்கி போராடிய மக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும். இறந்துபோன சிறுமிக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

திடீரென்று ஒன்று கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தள்ளிவிட்டுவிட்டு கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT