தமிழ்நாடு

புதுச்சேரி சிறுமி கொலை: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி

சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன் தற்கொலை முயற்சி..

DIN

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் திங்கள்கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

முத்தியால்பேட்டை போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சோலை நகரை சோ்ந்த 6 பேருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.இதில் 5 போ் சிறுவா்கள் என்பதும், அனைவரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 56 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதேயான கருணாஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரிய வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சக கைதி கருணாஸ் கூச்சலிட்ட நிலையில், சிறைக் காவலர்கள் விவேகனந்தனை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT