அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு 
தமிழ்நாடு

அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு!

மன்சூர் அலிகானுக்கு ஆரணி அல்லது வேலூர் தொகுதி ஒதுக்கப்படுமா?

DIN

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தமாக, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிட இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த நிலையில், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆரணி அல்லது வேலூர் தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT