முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார் ஆர்.என். ரவி: அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 16 மார்ச், 2024 at 5:42 AM
அமைச்சர் ரகுபதி கோப்புப்படம்
பகிர்:

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ஓட்டேரியில் அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், துணைவேந்தர்கள் பதவிகால விவகாரத்தில் வரம்பு மீறி செல்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்தி வரும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் முடிவு கட்டப்படும்.

தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவியேற்பு விழா நடத்தப்படும்.

மனிதாபிமானம் பாராமல் பழிவாங்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →