பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்ட ராம்நாத் கோயங்கா! ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்
கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியது குறித்து....
தமிழ்நாடுபத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்ட ராம்நாத் கோயங்கா! ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்
கல்விச் சிந்தனை அரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியது குறித்து....
பத்திரிகை துறையில் எந்தவித அச்சமுமின்றி செயல்பட்டவர் ராம்நாத் கோயங்கா என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது:
''தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரைக் கேட்டதுமே நமது மனதில் தோன்றும் பெயர் ராம்நாத் கோயங்கா. அவர் பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்டவர். உண்மையின் பக்கம் நின்று கேள்விகளை எழுப்பியவர்.
ஆரம்பத்திலிருந்தே வளர்ச்சியை நோக்கிய முற்போக்கு மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. மதிய உணவுத் திட்டம் இங்குதான் தொடங்கப்பட்டது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இந்த வளர்ச்சி நிலையான சரிவை நோக்கிச் செல்கிறது. கல்வியின் தரம் குறைந்து வருவதே இதற்கு காரணம்'' என ஆளுநர் பேசினார்.