மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்குத் தடை!
மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக பரப்படும் தவறான தகல்களை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வெளியாகும் தவறான தகல்கள் குறித்து உண்மை கண்டறியும் குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என கண்டறியப்பட்டால் அப்பதிவை சமூக வலைதளங்கள் உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசின் உண்மை சரிப்பார்ப்புக் குழு அமைக்கும் அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Advertisement
தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.