முகப்பு
தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்!

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

Updated On : 22 மார்ச் 2024, 12:49 pm IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பகிர்:

கா்நாடகத்தைச் சோ்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

Advertisement

Advertisement

ஆனால், இந்த மக்களவைத் தோ்தலில் அந்தச் சின்னமானது கா்நாடகத்தைச் சோ்ந்த புதிய கட்சியான பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வில்லை என்று தெரிவித்து பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments