தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால்... டிடிவி தினகரன் எச்சரிக்கை

DIN

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல எங்களுக்கு கிடைத்துள்ள குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுவோம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஊழல் செய்து கொள்ளை அடித்தவர் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும்.

ஏற்றுள்ள வேடத்திற்கேற்ப டோக்கன் என்றெல்லாம் என்னைப்பற்றி தங்க தமிழ்ச்செல்வன் பேசுகிறார். யார் விசுவாசிகள், யார் துரோகிகள் என்று மக்களுக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT