கோப்புப்படம் 
தமிழ்நாடு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.

மே மாதத்தில் நடைபெறும் கோடை விழாவின்போது மட்டும் சுமாா் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர்.

உதகையில் முறையான சாலைகளோ, மேல்பாலங்களோ இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ -பாஸ் முறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட பதிவெண்(TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்துள்ளவர்கள் உரிய ஆவணங்களை உதகை வட்டார அலுவலகத்தில் காண்பித்து இ-பாஸ் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT