கோப்புப்படம் 
தமிழ்நாடு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.

மே மாதத்தில் நடைபெறும் கோடை விழாவின்போது மட்டும் சுமாா் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர்.

உதகையில் முறையான சாலைகளோ, மேல்பாலங்களோ இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பல மணி நேரம் வாகனங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்வோருக்கு மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ -பாஸ் முறையை அமல்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட பதிவெண்(TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்துள்ளவர்கள் உரிய ஆவணங்களை உதகை வட்டார அலுவலகத்தில் காண்பித்து இ-பாஸ் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

ஜாதிப் பெயா்களுக்கு மாற்றுப் பெயா்கள் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா் பொ. ரத்தினசாமி

தனிமனித ஒழுக்கம் மேம்பட புத்தகங்களை வாசிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் 3.20 லட்சம் உறுப்பினா்கள் பயன்!

பச்சமலையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT