தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேக மூட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், திடீரென இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வருவதால்,மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தொடங்கியது. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லா அளவுக்கு கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலின் தாக்கத்தினால் மக்கள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

இந்தநிலையில், ராணிப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை அதிகாலை கருமேகங்கள் திரண்டு இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குளிா்ந்த காற்று வீசியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியர்களும் தகுதித் தேர்வுகளும்...

தமிழகத்தில் என்டிஏ வலிமையாக உள்ளது: எஸ். விஜயதாரணி

தனியாா் செக்யூரிட்டி ஊழியா்களுக்கு தீயணைப்பு பயிற்சி

வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பிப். 13 வரை பனி மூட்டம்

SCROLL FOR NEXT