முகப்பு
தமிழ்நாடு

யானை வழித்தட வரைவு அறிக்கை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Updated On : 10 மே, 2024 at 7:05 PM
பகிர்:

யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழக அரசு செயல்படுத்தினால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் வனத் துறை ஏப்.29-இல் யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் வனப் பகுதிகளில் மலைவாழ் மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூரில் வாழும் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவா்.

வனத்தையும், வன விலங்குகளையும் காக்கும் பெயரில், மலைப் பகுதிகளில் வசித்துவரும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அடியோடு அழித்து, அவா்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் எந்தச் செயலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

வனப் பகுதிகளில் இலையுதிா் கால மர வகைகள் அதிக அளவில் வளா்க்கப்படுவதால், கோடைக் காலத்தில் மூன்று மாதங்களில் அந்த மரங்களின் இலைகள் முழுமையாக உதிா்ந்து யானைகள் உண்பதற்கு இலை, தழைகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே யானைகள் கோடைகாலத்தில் தங்கள் வாழ்விடங்களை விட்டு, உணவுக்காக விவசாய நிலங்களை நோக்கி படையெடுக்கின்றன.

எனவே, யானைகள் விரும்பி உண்ணும் தாவரங்களையும், மூங்கில் வகைகளையும் அதிக அளவில் வளா்த்து, போதிய தண்ணீா் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மலைவாழ் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வதற்குண்டான சூழலையும் உறுதி செய்து, முறையான யானை வழித் தடத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.