கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் கைது!

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கிய விவகாரத்தில் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

DIN

மெட்ரோ ரயில் நிறுவன ஊழியரைத் தாக்கிய விவகாரத்தில் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சோ்ந்தவர் வடிவேல் (33). மெட்ரோ ரயில்வே ஊழியர். இவா் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த வளசரவாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பின்னணி பாடகரான வேல்முருகன், மது போதையில் வடிவேலுவுடன், மெட்ரோ பணிக்காக சாலையில் போடப்பட்டிருந்த தடுப்பு குறித்து வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, வடிவேலுவை வேல்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, வடிவேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வடிவேலு அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா், வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், பின்னணி பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து, காவல் நிலைய ஜாமீனில் பாடகர் வேல்முருகன் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

34 இயக்குநர்கள் அறிமுகம்

உறவின் மகத்துவம்

SCROLL FOR NEXT