கோப்புப்படம் 
தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்!

சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

பெண் காவலா்களை அவதூறாகப் பேசியதாக கோவை சைபா் கிரைம் உதவி ஆய்வாளா் சுகன்யா அளித்த புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் தேனியில் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடா்ந்து பல்வேறு புகாா்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாா் அடுத்தடுத்து அவரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டதன்பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அவா் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கை எலும்பு முறிவு தொடா்பாக மாவுக்கட்டு போடப்பட்டிருந்த சவுக்கு சங்கா், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டாா். அப்போது, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா்தான் தனது கையை உடைத்ததாகவும், சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் சவுக்கு சங்கா் குரல் எழுப்பியபடி சென்றாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த பின்னா் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 4-இல் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது போலீஸாா் தரப்பில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரிய மனு, நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒரு நாள் மட்டும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஒரு நாள் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, சவுக்கு சங்கரை மே 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

SCROLL FOR NEXT