கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

சென்னை - திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருப்பதி யார்டில் நடைபெறும் பராமரிப்புப் பணியின் காரணமாக திருப்பதி செல்லும் சில ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில்கள் ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 15 முதல் 31 வரை ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இருவழித்தடங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலிருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் சப்தகிரி விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலிருந்து பிற்பகல் 4.25 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT