முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் மின் சேவை வளர்ந்த நாடுகளுக்கு சமம்: ஆர்.கே. சிங்

வளர்ந்து நாடுகளுக்கு இணையாக, தமிழகத்தின் மின் சேவை இருப்பதாக புகழாரம்..

Updated On : 27 மே, 2024 at 12:26 PM
பகிர்:

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் மின்சார சேவை வளர்ந்த நாடுகளுக்கு சமமாக இரப்பதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் பாராட்டியிருக்கிறார்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மின்துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில், மின்சார சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மின் வாரியத்தின் வருங்கால திட்டங்கள், ஒவ்வொருமாநிலமும் மின் துறையில் செய்யும் மற்றும் திட்டமிட்டுள்ள பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் தடை ஏற்படுவது குறைவு. தமிழ்நாட்டில் மின் சேவை என்பதன் நம்பகத்தன்மையானது வளர்ந்து நாடுகளுக்கு இணையாக இருப்பதாகவும் பாராட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரே, தமிழகத்தில் குறைவான மின் தடை ஏற்படும் மாநிலம் தமிழகம் என அறிவித்திருப்பது, முக்கிய பாராட்டாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →