முகப்பு
தமிழ்நாடு

பாதிரியார் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் தங்கம் கொள்ளை!

பாதிரியார் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 28 மே 2024, 11:04 am IST
பகிர்:

புதுக்கோட்டை கணேஷ் நகரிலுள்ள பாதிரியார் ஜான் தேவசகாயம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், பீரோவில் இருந்த 80 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.

குடும்பத்துடன் கோவைக்கு மருத்துவச் சிகிச்சைக்காக சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பிபோது, தங்களின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

கணேஷ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மோப்பநாயும் அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.