பூத்துக் குலுங்கும் பிரம்மகமலம் எனும் நிஷாகந்தி மலா்கள் - கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவையில் மலர்ந்த பிரம்மகமலம் பூ!

கோவையில் பிரம்மகமலம் என்னும் நிஷாகந்தி பூ மலர்ந்துள்ளது.

DIN

கோவை : கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் என்னும் நிஷாகந்தி பூத்துள்ளது. பலரும் வந்து பூக்களை பார்த்துச் சென்றனர்.

கோவை துடியலூர் அருகே ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் என்னும் நிஷாகந்தி பூ கஜலட்சுமி பாஸ்கரன் என்பவரது வீட்டில் பூத்துள்ளது.

அரிதாக மலரும் பூ என்பதா, பிரம்மகமலத்துக்கு அவர்கள் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆவலுடன் வந்து பார்த்துச் சென்றனர்.

கோவை துடியலூர் அருகே லட்சுமி நகர் பகுதியில் உள்ள கஜலட்சுமி பாஸ்கரன் என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் என்னும் நிஷாகந்தி பூச்செடி வளர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு அச்செடியில் 5 பிரம்மகமல பூக்கள் பூத்துள்ளன. இதையடுத்து அவ்வீட்டார் அந்த பூவிற்கு கற்பூரம் காட்டியும் ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து இரவில் மட்டுமே மலர்ந்து காலையில் வாடிவிடும் பிரம்மகமல பூவை பார்த்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

SCROLL FOR NEXT