முகப்பு
தமிழ்நாடு

மதுரை எஸ்.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார்

மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார்.

Updated On : 11 நவம்பர், 2024 at 5:40 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பகிர்:

மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு அளித்தார்.

உசிலம்பட்டி அருகே ஆர்.பி.உதயகுமாருடன் சென்ற வாகனங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த தாக்குதலில் அதிமுக நிர்வாகிகள் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்: கமல்ஹாசன்

இந்த நிலையில் தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இபிஎஸ்ஸின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்த சம்பவத்தில் அமமுகவினர் 6 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாகனங்களை மறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அதிமுக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →