கொடைக்கானலில் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
கொடைக்கானலில் பாதுகாப்பு கருதி நீளமான, கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொடைக்கானலில் பாதுகாப்பு கருதி நீளமான, கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள்) கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த புதிய நடைமுறை வருகிற நவ. 18 ஆம் தேதி அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.