சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் என்ஜின் கோளாறு!
சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் ஏற்பட்டக் கோளாறால் வேலைக்குச் செல்லும் பயணிகள் பலர் பாதிப்படைந்தனர்.
தமிழ்நாடுசென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் என்ஜின் கோளாறு!
சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் ஏற்பட்டக் கோளாறால் வேலைக்குச் செல்லும் பயணிகள் பலர் பாதிப்படைந்தனர்.
சென்னை சென்ட்ரல் − சென்னாப்பாளையம் செல்லக்கூடிய விரைவு ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் பழுதாகி நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர்.
பயணிகளை இறக்கிவிட்டு சென்ட்ரலில் இருந்து வடசென்னை எண்ணூர் யார்டை நோக்கி வரும் பொழுது விரைவு ரயில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ரயில் தண்டவாளத்திலேயே பழுதாகி நின்றது.
இந்த ரயில் கொருக்குப்பேட்டையில் பழுதாகி நின்றதால் இவ்வழியாகச் செல்லக்கூடிய மற்ற ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், வேலைக்குச் செல்வோர் கால தாமதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் ரயில்வே ஊழியர்களால் என்ஜின் பிரச்னையானது சரிசெய்யப்பட்டு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்