கனமழை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒத்திவைப்பு.
திருச்சி: கனமழை எச்சரிக்கை காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவிருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து தேர்வு நெறியாளர் பா. ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக இருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிப்பு.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.