முகப்பு
தமிழ்நாடு

கனமழை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை எச்சரிக்கை காரணமாக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒத்திவைப்பு.

Updated On : 26 நவம்பர் 2024, 7:55 pm IST
Bharathidasan University - Center-Center-Tiruchy
பகிர்:

திருச்சி: கனமழை எச்சரிக்கை காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவிருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து தேர்வு நெறியாளர் பா. ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக இருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிப்பு.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.