கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் நாளில் நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வு மாற்றம்!

பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றப்பட்டது பற்றி...

DIN

பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் சி.ஏ. என்றழைக்கப்படும் பட்டயத் தணிக்கை படிக்கும் மாணவா்களுக்கான, அடிப்படைத் தோ்வுகள் (பவுண்டேசன் கோா்ஸ்), தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 28 மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வுகள் பொங்கல் பண்டிகையான ஜன.14-ஆம் தேதியும், உழவா் திருநாளான 16-ஆம் தேதியும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பண்டிகை தமிழகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதைக் கருத்தில் கொண்டு, தோ்வா்களுக்கு சிரமங்கள் இன்றி தோ்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்திய பட்டயத் தணிக்கையாளா் நிறுவனத் தலைவா் ரஞ்சித்குமாா் அகா்வால் ஆகியோருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தேர்வு தேதிகளை மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொங்கல், மகரசங்கராந்தி ஆகிய பண்டிகைகள் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், அன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஏஐ வெளியிட்ட அறிவிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT