பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 
தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள மீட்புப்படையினர் விரைந்துள்ளனர்.

DIN

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களுக்குப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் (நவ.27)நாளை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்குத் தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 2 நாள்களில் இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரும். புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போது, இது புயலாக மாறுவது தொடர்பாக உறுதிசெய்யப்படும்.

டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேரிடர் மீட்புப்படையினர் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குப் பேரிடர் மீட்புப்பணி குழு விரைந்துள்ளது. 5 பேரிடர் மீட்புப்பணியில் சுமார் 150 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் பொங்கல் விழா

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

மஹிந்திரா எக்ஸ்யூவி - 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி - 9எஸ் காரின் முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT