கி. குமார் 
தமிழ்நாடு

பணியில் இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

DIN

நாகை மாவட்டம், தலைஞாயிறு அடுத்த வாட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் கி. குமார் (57) பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கொடப்பள்ளி பகுதியை சேர்ந்த இவர், வாட்டாகுடி பள்ளியில் கடந்த 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டாரத் தலைவராவும் செயல்பட்டு வந்தார்.

இறந்தவரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தலைஞாயிறு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் நவ. 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

SCROLL FOR NEXT