கிரிக்கெட் வீரர் நடராஜன். 
தமிழ்நாடு

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்: கிரிக்கெட் வீரர் நடராஜன்

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

DIN

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64வது ஆண்டு விழா சேலம் மாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசும் போது, சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் தற்போதைய இளைஞர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

இதை பயன்படுத்தி தன்னை போல் பலர் முன்னுக்கு வர வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்; அதேபோல் நம்பிக்கை தான் மூலதனம்.

நிறைய கஷ்டங்களை தாண்டிதான் நான் இங்கு வந்துள்ளேன். என்னைப்போல் சேலத்தில் இருந்து நிறைய நடராஜன்கள் வர வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உடற்தகுதி மிக முக்கியம்.

சேலத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT