கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஆயுத பூஜை முன்னிட்டு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு 09 மற்றும் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறித்துள்ளது.

DIN

சென்னை: ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு 09 மற்றும் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை இன்று அறித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09 மற்றும் 10ஆம் தேதிகளில் 1105 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருக்கு 09 மற்றும் 10 ஆகிய நாட்களில் 300 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு 09 மற்றும் 10ஆம் தேதிகளில் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி - திரளான பக்தர்கள் தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

SCROLL FOR NEXT