கவரப்பேட்டை ரயில் விபத்து: எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள்?
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட இடத்தில் எப்படி நடக்கின்றன மீட்புப் பணிகள் என்பதன் புகைப்படங்கள்
பொக்லைன் கனரக வாகனங்கள் மூலம் 3 ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டது.
தண்டவாளங்கள் முழுவதும் சிதறிக்கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும்பணி முதல் கட்டமாக நடைபெற்றது. கிரேன் மூலம் ரயில் என்ஜினி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
கழுகுப்பார்வையில் விபத்து நடந்த இடம்.. ஏற்கனவே ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் நேரிட்ட விபத்து போலவே நேரிட்டுள்ளது.
Advertisement
ரயில் பெட்டியை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரங்கள்
ரயில் என்ஜின் உள்பட 4 பெட்டிகளை ரோப் மூலம் ராட்சத கிரேன் தூக்கி அகற்றும் பணி நடந்தது.
பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ரயில்வே ஊழியர்கள்
ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தில்..