கனமழை: ரயில் சேவை குறித்த தகவலுக்கு உதவி எண்கள்!
கனமழை எதிரொலியாக தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு.
சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை - நெல்லூர் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதையும் படிக்க : சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் சேவையில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், ரயில் சேவை குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
044 - 25330952, 044 - 25330953 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொண்டு ரயில் சேவை குறித்த தகவல்களை கேட்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.